close
Choose your channels

சொந்த ஊரை சேர்ந்த 250 குடும்பத்திற்கு அரிசி உள்ளிட்ட பொருட்களை கொடுத்த நடிகர்

Monday, May 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தினக்கூலி மக்கள் உள்பட பலர் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள் பலர் தங்களால் இயன்ற அளவுக்கு நிதியாகவும், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களாகவும் உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் நந்தா தனது சொந்த ஊரான கோவை அருகே உள்ள சென்றம்பாளையம் கிராமத்தில் உள்ள 250 குடும்பங்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை கொடுத்து உதவி செய்துள்ளார். இதனையடுத்து அந்த கிராமத்தினர் நடிகர் நந்தா மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு நன்றி கூறியுள்ளனர்.

இதேபோல் இன்னும் பல நடிகர்கள் அவரவர் சொந்த ஊருக்கு மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவருக்கும் நிதியுதவியும் பொருளுதவியும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.