close
Choose your channels

முதலமைச்சரிடம் ஆசி பெற்ற சந்தானம்: கோரிக்கையை ஏற்று உறுதிமொழி அளித்ததாக தகவல்!

Friday, December 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சந்தானம் சமீபத்தில் புதுவை முதல் அமைச்சரை சந்தித்து ஆசி பெற்ற நிலையில் அவருக்கு உறுதிமொழியை முதலமைச்சர் ரங்கசாமி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவர் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மரியாதை நிமித்தமாக புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை நடிகர் சந்தானம் சந்தித்து தனது படத்தின் முழு படப்பிடிப்பும் புதுச்சேரியில் நடைபெறுவதால் புதுவை அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்,

புதுச்சேரிக்கு படப்பிடிப்புக்கு வரும் அனைத்து படக்குழுவினருக்கும் தனது அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என உறுதி அளித்த முதல்வர், புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்துவதற்கு கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து தனது கவனத்திற்கு வந்துள்ளதாகவும், விரைவில் கட்டணக்குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் சந்தானத்திடம் முதலமைச்சர் ரங்கசாமி உறுதி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.