close
Choose your channels

விஜய்யின் மேல்முறையீட்டு மனு: நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை!

Monday, July 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய் கார் குறித்த வரி வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த தனி நீதிபதி, விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அவரது மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் விஜய் குறித்து சில ஆட்சேபத்துக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தன்னை பற்றி நீதிபதி கூறிய ஆட்சேபத்துக்குரிய கருத்துக்களை நீக்கவேண்டும் என்றும் கூறி விஜய் மேல்முறையீட்டு மனு செய்தார்

இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் விஜய்யின் சொகுசு கார் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனு வேறு அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்து ஐகோர்ட் நீதிபதி தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வரி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்ற நீதிமன்ற பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் விஜய்யின் மேல்முறையீட்டு மனு இன்னும் ஒரு சில நாட்களில் வரி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.