close
Choose your channels

நான் சோப்பு தான் விற்கிறேன், என்னை விற்கலைடா நாயி.. நடிகை ஐஸ்வர்யாவின் கோபம் எதனால்?

Wednesday, April 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் நடிகை ஐஸ்வர்யா ஆவேசமாக ’நான் சோப்பு தான் விற்கிறேன், என்னை விற்கவில்லை என கோபத்துடன் பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஐஸ்வர்யா தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக விக்ரமின் ’மீரா’ பாக்யராஜின் ’ராசுகுட்டி’ ரஜினியின் ’எஜமான்’ ஆகிய படங்கள் குறிப்பிட்டுச் சொல்லலாம். மேலும் பல படங்களில் அவர் குணச்சித்திர வேடங்களிலும் வில்லியாகவும் நடித்துள்ளார் என்பதும் திரைப்படங்களில் மட்டுமின்றி பல டிவி சீரியல்களில் அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா தற்போது திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் சோப்பு தயாரித்து விற்பனை செய்து வருவதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மேலும் அவர் சோப்பு தயாரிப்பது எப்படி என்பது குறித்த வீடியோவையும் இணையதளங்களில் பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு சிலர் ஐஸ்வர்யாவின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாச மெசேஜ்களை அனுப்பி உள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் கோபமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ’நீ வயதானாலும் சும்மா கும்முனு இருக்க என்பது போன்ற அருவருக்கத்தக்க ஆபாச புகைப்படங்களை எனக்கு அனுப்பி உள்ளார்கள். 52 வயது கிழவியான என்னை இவ்வாறு விமர்சனம் செய்வது உங்களுக்கு அசிங்கமாக இல்லையா? நான் சோப்பு தான் விற்கிறேன், என்னை விற்கவில்லை என்று கோபமாக பேசி உள்ளார்.

மேலும் எதையும் பண்ண வக்கில்லாமல் ரெண்டு கட்டை விரலை வைத்துக் கொண்டு இவ்வளவு ஆட்டமா? நைட்டு 11 மணிக்கு மேல உனக்கு என்னத்துக்குடா எஸ்எம்எஸ் வேண்டி இருக்கு? என்று ஆவேசமாக பேசும் வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.