close
Choose your channels

கணவர் மீது புகார் அளித்த பிக்பாஸ் வின்னர்: போலீசார் அதிரடி நடவடிக்கை

Thursday, November 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் இந்தி 4 நிகழ்ச்சியின் வின்னரும் நடிகையுமான ஸ்வேதா திவாரி, தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கொடுத்த புகாரின் அடிப்படிடையில் அவரது கணவரும் நடிகையுமான அபிநவ் கோலியை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல இந்தி நடிகையான ஸ்வேதா திவாரி, நாகினி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் ஒருசில இந்தி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இந்தி பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானதோடு அந்த நிகழ்ச்சியின் வின்னராகவும் தேர்வு செய்யப்பட்டார்

நடிகை ஸ்வேதா திவாரி ஏற்கனவே நடிகர் ராஜா சவுத்ரி என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நிலையில் நடிகர் அபினவ் கோலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இரண்டாவது கணவர் மீது தற்போது போலீசில் புகார் செய்துள்ளார். தனது கணவர் அபினவ் கோலி மது போதையில் தினமும் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக ஸ்வேதா திவாரி அளித்த புகார் அடிப்படையில் போலீசார் அபினவ்வை கைது செய்தனர்.

கணவர் சிறை சென்ற பின்னர் தான் நிம்மதியாக இருப்பதாகவும், தனது வாழ்க்கையில் இருந்த விஷக்கிருமி வெட்டி எறியப்பட்டுவிட்டதாகவும் ஸ்வேதா தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.