close
Choose your channels

நடுரோட்டில் ஆண் நண்பருடன் சண்டை: சிவராத்திரியில் ஈஷா மையத்திற்கு வந்த நடிகையால் பரபரப்பு..!

Tuesday, February 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவராத்திரி கொண்டாட கோவை அருகே உள்ள ஈஷா மையத்திற்கு வந்த நடிகை ஒருவர் நடுரோட்டில் தனது ஆண் நண்பருடன் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் சிவராத்திரி கொண்டாடப்பட்டபோது கோவை அருகே உள்ள ஈஷா மையத்திற்கு ஏராளமான நடிகைகள் குவிந்தனர் என்பதும் கோலாகலமாக சிவராத்திரி கொண்டாடப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த துணை நடிகை அங்கீதா என்பவர் தனது ஆண் நண்பருடன் கோவை ஈஷா மையத்திற்கு சிவராத்திரி கொண்டாட வந்துள்ளார். சிவராத்திரி முடிந்தவுடன் தமிழகத்தில் உள்ள முக்கிய பகுதிகளை சுற்றி பார்க்க திட்டமிட்டு, இருவரும் வாடகை கார் எடுத்து பல இடங்களை சுற்றி பார்த்தனர். இந்த நிலையில் மதுரையில் விடுதி ஒன்றில் தங்கி அங்கிருந்த இடங்களை சுற்றிப் பார்த்த பின்னர் ராமேஸ்வரம் சென்று கொண்டிருக்கும்போது திடீரென நடுவழியில் அங்கீதா மற்றும் அவரது ஆண் நண்பர் காரில் சண்டை போட்டதாக தெரிகிறது

இதனை அடுத்து காரில் இருந்து இறங்கிய அங்கீதா ஆண் நண்பரை சரமாரியாக திட்டியதாகவும் ஒரு கட்டத்தில் இருவரும் நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து காவல்துறையினருக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் கொடுத்த நிலையில் காவல்துறையினர் விரைந்து வந்த இருவரையும் விசாரணை செய்தனர். அதன்பின் இருவரையும் சமாதானப்படுத்தி காரில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மதுரை பைபாஸ் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.