close
Choose your channels

சிரிப்பு தான் வருது.. ரஜினிகாந்த் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த ரோஜா..!

Saturday, April 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று என்டி ராமராவ் அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குறித்து பெருமையாக பேசினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் ஹைதராபாத் நகரம் தொழில்நுட்ப ஹைடெக் நகராக மாறியதற்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம் என்று கூறினார். இந்த நிலையில் ரஜினிகாந்த் பேச்சை கேட்கும் போது சிரிப்பு தான் வருகிறது என்று நடிகையும் ஆந்திர மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து கூறிய போது ’கடந்த 2003 ஆம் ஆண்டுடன் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலம் முடிந்துவிட்டது, அதன் பின் 20 ஆண்டுகள் ஹைதராபாத் பெரும் வளர்ச்சி அடைந்ததற்கு சந்திரபாபு நாயுடு எப்படி காரணமாக இருக்க வேண்டும் என்பதை ரஜினிகாந்த் நினைத்து பார்க்க வேண்டும்.

என்டி ராமராவ் மரணத்திற்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும், அவர் தன் இறுதி காலத்தில் சந்திரபாபு நாயுடு ஒரு திருடன் என்றும் அவரை யாரும் நம்பாதீர்கள் என்று கூறியுள்ளார். ரஜினி அவர்களுக்கு இது தெரியவில்லை என்றால் என்டி ராமராவ் பேசிய சிடியை அவருக்கு அனுப்பி வைக்கவும் தயாராக இருக்கிறேன்.

மேலும் ரஜினிகாந்த் மீது ஒரு நடிகராக எனக்கு மரியாதை உள்ளது, ஆனால் அதே நேரத்தில் சந்திரபாபு குறித்து நேற்று அவர் பேசியது சிரிப்பை வரவழைத்தது, அவரது பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

ரஜினியின் ‘உழைப்பாளி’, ‘வீரா’ ஆகிய படங்களில் நடித்த ரோஜா, ரஜினியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.