close
Choose your channels

நடிகை அனுபமா பரமேஸ்வரனால் பீகார் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி?

Friday, June 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரனால் பீகார் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பீகார் மாநில ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் ரிஷிகேஷ் குமார் என்பவர் கலந்து கொண்டு தேர்வு எழுதி உள்ளார். இந்த தேர்வில் அவர் வெற்றி பெற்றதையடுத்து இணையதளத்தில் சென்று மதிப்பெண் பட்டியலைப் பார்த்தபோது மதிப்பெண் பட்டியலில் அவரது படத்திற்கு பதிலாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் படம் இடம்பெற்று இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததால் இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

ராஷ்டிரிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் இதனை சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிர்ந்து வருவதால் பீகாரில் பெரும் பரபரப்பு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடைபெற்ற இந்த குழப்பம் பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடியாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பும் கடந்த ஆண்டுகளில் இதுபோல இந்திராகாந்தி மற்றும் சன்னி லியோன் படங்கள் ஆசிரியர் தேர்வு மதிப்பெண் பட்டியலில் இடம்பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் ’பிரேமம்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’கொடி’ உள்பட பல தமிழ் தெலுங்கு மலையாளம் படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் தமிழில் ’தள்ளிப்போகாதே’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.