close
Choose your channels

ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் செலவு.. விபத்தில் சிக்கிய நடிகை கவலைக்கிடம்..!

Thursday, April 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் விபத்தில் சிக்கி கோமா நிலையில் உள்ள பிரபல நடிகை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருடைய சிகிச்சைக்காக அவருடைய பெற்றோர்கள் தினமும் இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கேரளாவை சேர்ந்த நடிகை அருந்ததி நாயர் என்பவர் தமிழில் ;பொங்கி எழு மனோகரா; ’சைத்தன்’ உள்ளிட்ட படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த மாதம் தன்னுடைய சகோதரருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அருந்ததி நாயர் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேச்சு மூச்சு இல்லாமல் சாலையில் கிடந்ததாகவும் அதன் பின்னர் தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது .

கடந்த மூன்று வாரங்களாக அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்காக தினமும் இரண்டு லட்ச ரூபாய் அவரது குடும்பத்தினர் செலவு செய்து வருவதாகவும் இதுவரை 40 லட்சத்துக்கு மேல் செலவாகி விட்டதாகவும் அருந்ததியின் சகோதரி ஆர்த்தி என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் குடும்பத்தினர் இருக்கும் நிலையில் திரையுலக பிரபலங்கள் யாரும் உதவ முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அவரது தோழியான தமிழ் சீரியல் நடிகை ரம்யா என்பவர் தனக்கு தெரிந்தவர்களிடம் நிதி திரட்டி ஒரு குறிப்பிட்ட தொகையை அவரது குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.