close
Choose your channels

ஊரடங்கால் வருமானமில்லை: சமையல் வேலை செய்யும் தமிழ் நடிகை!

Saturday, October 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வேலையிழந்து வருமானம் இழந்தனர் என்பது குறித்த செய்திகள் வெளியாகி வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக திரையுலகைச் சேர்ந்த பலரும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாததால் வருமானம் இன்றி பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர். காய்கறிகள் வியாபாரம், மீன் வியாபாரம், பழ வியாபாரம், மளிகை வியாபாரம், ஆட்டோ, கார் ஓட்டுவது உள்பட பல தொழில்களை திரையுலகைச் சேர்ந்தவர்கள் சிலர் தற்போது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மணிவண்ணன் இயக்கிய ’வாழ்க்கைச் சக்கரம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பல படங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த நடிகை பிருந்தா, தற்போது சமையல் வேலை செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி கணவருடன் மலேசியா சென்ற பிருந்தா, மலேசியாவில் கொரோனா பாதிப்பு அதிகமானதால் தற்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். சென்னையில் அவர் மலேசிய உணவுகளை தயாரித்து சினிமா பிரபலங்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும், இதன்மூலம் அவருக்கு நல்ல வருமானம் வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஒரு சில தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் விரைவில் அவரை தொலைக்காட்சி சீரியல்களில் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.