close
Choose your channels

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் ஏமாற்றிவிட்டார்....! நாடோடிகள் பட நடிகை ஆதாரங்களுடன் புகார்...!

Friday, May 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக - வின்  முன்னாள் அமைச்சரான மணிகண்டன் தன்னை ஏமாற்றிவிட்டதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை புகார் அளித்துள்ளார்.

சென்ற சில வருடங்களுக்கு முன்பு தினகரனுடன் கைகோர்த்து, 18 ஆதரவு எம்எல்ஏ-க்கள், முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு தந்தனர். இந்த விவகாரத்தில் பதவி பறிக்கப்பட்ட எம்எல்ஏ-களில் மணிகண்டனும் ஒருவர்.

இந்தநிலையில் நாடோடி படத்தில் நடித்த நடிகை சாந்தினி தேவாவுடன்  நெருக்கமாக பழகி வந்துள்ளார் முன்னால் அமைச்சர் மணிகண்டன். கடந்த 5 ஆண்டுகளாக அவரை காதலித்துவிட்டு, திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையே அவருடன் நெருங்கி பழகியுள்ளதால் சாந்தினி கருவுற்று இருக்கிறார். இதனால் தன்னை திருமணம் கொள்ளவேண்டும் என கூறியதற்கு, மணிகண்டனோ கருவை கலைக்க வைத்து,  அவரை  அடித்து துன்புறுத்தியுள்ளார்.  மேலும் திருமணம் செய்யச்சொல்லி வற்புறுத்தினால், அந்தரங்க புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று , கூலிப்படையை வைத்து மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் சாந்தினி தக்க ஆதாரங்களுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், மணிகண்டன் மீது இன்று புகாரளித்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.