close
Choose your channels

விவசாயிகளுக்காக அரசை எதிர்த்து போராட தயார். பிரபல நடிகை

Saturday, June 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் ரஜினி, கமல் உள்பட முன்ன்ணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமான நடிகையாக இருந்தவர் கெளதமி. தற்போது திரையுலகில் இருந்து சற்று ஒதுங்கியிருந்தாலும் சமூக மற்றும் அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கெளதமி, செய்தியாளர்களிடம் பேசியபோது விவசாயிகள் பிரச்சனை குறித்த தனது கருத்தை தெரிவித்தார். அவர் கூறியவதாவது:

'நாட்டில் இன்று விவசாயிகளும், விவசாயமும்தான் நசுக்கப்படுகிறது, நசுக்கப்படுகிறார்கள். ஜல்லிக்கட்டு, மீத்தேன், ஷேல் கேஸ், நெடுவாசலில் ஹைட்ராே கார்பன், இப்பாேது கதிராமங்கலத்தில் பிரச்னை என்று விவசாயிகள் இந்த அரசுகளால் தாெடர்ச்சியாக ஒடுக்கப்படுகிறார்கள். நசுக்கப்படுகிறார்கள். ஆனால், விவசாயிகளும் மாணவர்களும் அவர்களுக்கு எதிராக வீறுகாெண்டு எழுந்து பாேராடுவது ஆராேக்கியமான விஷயம். வாய்ப்பு கிடைத்தால் நானும் விவசாயிகளுடன் இணைந்து இந்த அரசுகளை எதிர்த்துப் பாேராடத் தயாராக இருக்கிறேன். பாேராட்டக் களத்துக்கு வர ஆர்வமாக இருக்கிறேன். ஏனென்றால், 'விவசாயம்தான் நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகள் பாேற்றப்பட வேண்டியவர்கள்' என்று வெறும் வாய் வார்த்தையாக சாெல்றாேம். ஆனால், நமக்கெல்லாம் சாேறு பாேடும் அவர்களுக்குதான் அரசுகள் தாெல்லைகள் காெடுக்கிறது. அதனால், விவசாயிகளுக்காக என்னாலான உதவிகளையும், ஒத்துழைப்பையும் தரத் தாயாராகவே இருக்கிறேன்.'

ஏற்கனவே ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை கெளதமி தற்போது விவசாயிகள் பிரச்சனையை கையில் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.