close
Choose your channels

மகாலட்சுமி கணவர் தயாரிப்பாளர் ரவீந்தர்  சந்திரசேகர் திடீர் கைது.. என்ன காரணம்..!

Friday, September 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவரும், தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் திடீரென நேற்று கைது செய்யப்பட்டு இருப்பது திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சேர்ந்த பாலாஜி கபா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை காவல் நிலைய ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் ரவீந்தர் சந்திரசேகர் தன்னிடம் நகராட்சி திட கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் குறித்து கூறியதாகவும், அந்த திட்டத்தின் மதிப்பு 200 கோடி என்றும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் என்றும் ஆசை கூறினார்.

அதை நம்பி 16 கோடி ரூபாய் முதலீடு செய்தேன். ஆனால் அவர் கூறியது போல் பவர் ப்ராஜெக்ட் திட்டம் ஆரம்பிக்காமல் ஏமாற்றியதால் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டேன். ஆனால் அவர் எனக்கு மிரட்டல் விடுத்தார் என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய நிலையில் போலி ஆவணங்களை தயார் செய்து, திடக்கழிவு ஆற்றலாக மாற்றுதல் திட்டம் குறித்து பாலாஜியிடம் கூறி அவர் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரரை கைது செய்தனர். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கடந்த ஆண்டுதான் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.