close
Choose your channels

அம்மாவின் பட்டுச்சேலையை அணிந்து திருமணத்திற்கு தயாராகும் நடிகை!

Monday, December 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

32 வருடங்களுக்கு முன் தனது அம்மா நிச்சயதார்த்த தினத்தன்று அணிந்த சேலையை தனது திருமணத்தில் அணிந்த நடிகையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பத்தினரை சேர்ந்த நடிகை நிஹாரிகாவின் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. விஜய் சேதுபதி நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற திரைப்படத்திலும் ஒருசில தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ள நிஹாரிகாவுக்கும் பொறியாளர் சைதன்யாவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் ஆன நிலையில் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது

இதனை அடுத்து திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதும் அது குறித்த புகைப்படங்களும் வைரல் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் சமீபத்தில் நடைபெற்றபோது நடிகை நிஹாரிகா தனது தாயாரின் நிச்சயதார்த்தத்தின் போது எடுத்த பட்டுச் சேலையை அணிந்து காட்சி அளித்துள்ளார்

32 வருடங்களுக்கு முன் தனது தாயார் பத்மஜா நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட இந்த சேலை இப்பொழுதும் அழகாக இருப்பதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். நிச்சயதார்த்தத்தின்போது தாயார் சேலை அணிந்த புகைப்படமும் தற்போது நிகாரிகா அதே சேலை அணிந்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.