close
Choose your channels

சாலையில் நடந்துசென்ற பிரபல நடிகையிடம் வழிப்பறி… அதிர்ச்சி தகவல்!

Thursday, December 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்துவரும் நிகிதா தத்தா சாலையில் நடந்து சென்றபோது தன்னுடைய செல்போனை பறிக்கொடுத்துவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் கடும் அதிர்ச்சி அடைந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

நடிகை நிகிதா தாத்தா மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள 14 ஆவது சாலையில் நேற்று இரவு 7.45 மணிக்கு நடந்து சென்றதாகவும் அப்போது அந்த வழியே பைக்கில் வந்த இருவரில் ஒருவர் தன்னுடைய தலையில் தட்டியபோது இன்னொருவர் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு சென்றுவிட்டார், கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்ட இந்தச் சம்பவத்தால் நான் கடும் அதிர்ச்சியடைந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தத் திருடர்களை நோக்கி நான் ஓடிச்சென்றதைப் பார்த்து, பின்னால் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் அவர்களைத் துரத்திச் சென்றார். ஆனாலும் அவர்கள் தப்பிச்சென்றுவிட்டனர். இதனால் கடும் பீதியடைந்து விட்டேன். அந்தச் சம்பவத்தில் இருந்து என்னால் மீளவே முடியவில்லை. இதனால் மக்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நடிகை நிகிதா தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

“கபீர் சிங்“ போன்ற திரைப்படங்களில் நடித்து வரவேற்பு நடிகையாக வலம்வரும் நிகிதா தத்தா இந்தச் சம்பவம் குறித்து தற்போது பாந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். இதையடுத்து நடிகை நிகிதா தத்தாவிற்கு நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் பாடகி ஷெர்லி ஆகியோர் ஆறுதல் தெரிவித்து கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.