close
Choose your channels

நடுரோட்டில் கணவர் முன் சுட்டுக்கொல்லப்பட்ட பிரபல நடிகை: வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம்!

Thursday, December 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் நடுரோட்டில் பிரபல நடிகை ரியா குமாரி என்பவர் அவரது கணவர் முன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ரியா குமாரி தனது கணவர் மற்றும் மகளுடன் நேற்று கொல்கத்தாவில் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென 3 மர்ம நபர்கள் அவரது காரை வழிமறித்தனர். இதனை அடுத்து அவர்களிடம் இருந்த பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருந்த போது நடிகை ரியா குமாரி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அந்த கொள்ளையர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த நடிகை ரியாகுமாரியை அவரது கணவர் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.