close
Choose your channels

தாத்தாவின் 85வது பிறந்த நாளை கொண்டாடிய பிரபல தமிழ் நடிகை: வைரல் புகைப்படங்கள்!

Monday, August 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ், மலையாளம், தெலுங்கு நடிகை ஒருவர் தனது தாத்தாவின் 85ஆவது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ’பிரேமம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, தென்னிந்தியா முழுவதும் புகழ் பெற்ற நடிகை சாய் பல்லவி அதன் பின்னர் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தியா’ என்றதிரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் தனுஷுடன் ’மாரி 2’, சூர்யாவுடன் ’என்ஜிகே’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும், மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார் என்பதும் 3 தெலுங்கு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் சாய் பல்லவிக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் தனது தாத்தாவின் 85வது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை சாய்பல்லவி பதிவு செய்துள்ளார். தாத்தாவிடம் ஆசி வாங்குவது போன்றும் பாட்டியை கட்டிப்பிடித்து உள்ளது போன்றும் தனது சகோதரியுடன் இருப்பது போன்றும் புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு மணி நேரம் கூட ஆகாத நிலையில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த புகைப்படங்களை லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.