close
Choose your channels

சஞ்சனா கல்ராணியுடன் லிவிங் ரிலேசன்ஷிப்பில் இருந்தது யார்? போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

Thursday, September 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனா கல்ராணியுடன் பிரபல டாக்டர் ஒருவர் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது

பிரபல கன்னட நடிகை சஞ்சனா கல்ராணியை போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்த போலீசார் அவருடைய வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது சஞ்சனா பெயரில் உள்ள வீடு மற்றும் அவருடைய பிஎம்டபிள்யூ கார் ஆகியவை சஞ்சனாவின் வருமானத்தில் வாங்கப்படவில்லை என்றும் அவரது நண்பர் டாக்டர் ஆஷிஸ் என்பவர் வாங்கிக் கொடுத்ததாகவும் தெரியவந்தது. இதனை விசாரணையில் ஒப்புக் கொண்ட சஞ்சனா, அவர் தனது நண்பர் என்றும் அடிக்கடி தனது வீட்டில் நடக்கும் விருந்தில் கலந்து கொள்வார் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து சஞ்சனாவும், டாக்டர் ஆஷிஸ் என்பவரும் திருமணம் செய்யாமலேயே லிவ்இன் ரிலேஷன்ஷிப் இருந்ததாக கூறப்படுகிறது

மேலும் சஞ்சனா தான் கைது செய்யப்படுவோம் என்று ஏற்கனவே யூகித்துக் கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மது அருந்தாமல் இருந்துள்ளதாகவும் அக்கம்பக்கத்தினரிடம் தன்னைப் பற்றி போலீசார் விசாரித்தால் எதுவும் தவறாக கூறிவிட வேண்டாம் என கெஞ்சி கேட்டு கொண்டுளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது

தற்போது மகளிர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சஞ்சனாவை 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையில் போதைப்பொருள் அவதாரத்தில் 24 முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக ராகினி மற்றும் சஞ்சனா வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.