close
Choose your channels

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கு: அரசியல் பிரபலம் கைது!

Wednesday, January 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் மற்றும் சூர்யா நடித்த ’பிரண்ட்ஸ்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி தற்கொலை வழக்கில் பிரபல அரசியல்வாதி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை விஜயலட்சுமி கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதுகுறித்த வழக்கை திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் மற்றும் ஒருசிலர் தன்னை மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறி இருந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த போலீசார் தற்போது ஹரி நாடாரை கைது செய்துள்ளனர். இவர் ஏற்கனவே பணமோசடி வழக்கு ஒன்றில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயலட்சுமி தற்கொலை வழக்கில் ஹரிநாடாரை கைது செய்ய அனுமதி கோரி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு திருவான்மியூர் போலீசார் கடிதம் எழுதி இருந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.