close
Choose your channels

அதிமுக எம்.எல்.ஏ திருமணம் செய்யவிருந்த மணப்பெண் திடீர் மாயம்

Monday, September 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருக்கும் 40 வயது ஈஸ்வரன் என்பவர் 23 வயது இளம்பெண் சந்தியா என்பவரை வரும் 12ஆம் தேதி திருமணம் செய்யவிருந்தார். இந்த நிலையில் திடீரென இன்று மணப்பெண் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

செப்டம்பர் 12ஆம் தேதி காலை 6.30 முதல் 7.30 மணி வரை முகூர்த்தம் நடைபெற திட்டமிட்டிருந்த நிலையில் இருவீட்டார்களும் திருமண வேலையில் பரபரப்பாக மூழ்கியிருந்தான்ர். இந்த திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களும் கலந்து கொள்வதாக அறிவிக்கபட்டிருந்தது.

இந்த நிலையில் திருமணம் நடைபெற இன்னும் ஒன்பது நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் மணமகள் சந்தியா திடீரென மாயமானார். அவர் தனது சகோதரி வீட்டிற்கு சென்று வருவதாக கூறியதாகவும், அதன்பின்னர் அவரை காணவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் சந்தியா ஏற்கனவே விக்னேஷ் என்பவரை காதலித்து வந்ததாகவும், தனது மகளுக்கும் விக்னேஷூக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்ததாகவும் சந்தியாவின் தாயார் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சந்தியாவை தீவிரமாக தேடி வருகின்றனர். சந்தியா மேஜர் என்பதால் அவர் கிடைத்தாலும் இந்த திருமணம் நடக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.