close
Choose your channels

10 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ்ப்படத்தில் மல்லிகா ஷெராவத்!

Wednesday, February 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட்டின் முன்னணி கவர்ச்சி நடிகையான மல்லிகா ஷெராவத் ஏற்கனவே கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த கமல்ஹாசனின் ’தசாவதாரம்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இதனையடுத்து கடந்த 2011ம் ஆண்டு சிம்பு நடித்த ’ஒஸ்தி’ என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பத்து வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தம்பி வெட்டோத்தி சுந்தரம், செளகார்பேட்டை, பொட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் வடிவுடையான் இயக்கி வரும் அடுத்த திரைப்படம் ’பாம்பாட்டம்’. இந்த படத்தில் ஜீவன் மற்றும் யாஷிகா ஆனந்த் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் மல்லிகா ஷெராவத் இணைந்து உள்ளதாகவும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார் என்றும் இயக்குனர் வடிவுடையான் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மல்லிகா ஷெராவத் உடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் வடிவுடையான் ஏற்கனவே சன்னிலியோன் நடித்து வரும் ‘வீரமாதேவி’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.