close
Choose your channels

12 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில்: ஐஸ்வர்யா ரஜினியின் வைரல் வீடியோ

Wednesday, June 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பணிபுரியும் வீடியோ வைரலாகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ’ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த ரீமா சென்னுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் பின்னணி குரல் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டப்பிங் பேசியுள்ளார். டப்பிங் தியேட்டரில் அவர் டப்பிங் பேசும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த பதிவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது .

நீண்ட இடைவேளைக்கு பிறகு டப்பிங் தியேட்டரில் தமிழ் திரைப்படத்திற்காக குரல் கொடுக்கின்றேன் என்றும் தண்ணீரில் மீன்கள் துள்ளுவது போன்றும் சந்தோசம் தனக்கு இருப்பதாகவும் அவர் இந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.