close
Choose your channels

14வது திருமண நாளை கொண்டாடும் அஜித் பட நாயகி: ரசிகர்கள் வாழ்த்து!

Thursday, June 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை இன்று தனது 14வது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அஜித் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான ’வரலாறு’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை கனிகா. அதன்பிறகு ’ஆட்டோகிராப்’ ’ஓ காதல் கண்மணி’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் ’எதிர்நீச்சல்’ என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை கனிகா கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி ஷ்யாம் ராதாகிருஷ்ணன் என்ற அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சாய் ரிஷி என்ற ஒரு மகன் உள்ளார்.

திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டிலான கனிகா, அதன்பின் மீண்டும் இந்தியா திரும்பி தற்போது திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று தனது 14-வது திருமண நாளை சிறப்பாகக் கொண்டாடிய கனிகா, தனக்கு மிகச்சிறந்த கணவர் வாய்த்து இருப்பதாகவும் அவர் தன்னுடைய சிறந்த நண்பராகவே இருந்து வருகிறார் என்றும் எங்களுடைய 14வது திருமண நாளை நாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுனோம் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.