close
Choose your channels

கொரோனாவில் இருந்து குணமானவுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்த முதல் வேலை!

Sunday, February 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளார். இதனை அடுத்து வரும் 8ஆம் தேதி முதல் தான் இயக்கவிருக்கும் மியூசிக் வீடியோவின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெறும் இந்த படப்பிடிப்பு 3 நாட்கள் நடைபெறும் என்றும் அதன் பின்னர் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த மியூசிக் வீடியோவில் நடிக்கும் நடிகர் நடிகை கொடுத்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் பிரிவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க இருதரப்பு பெற்றோர்கள் முயற்சி செய்து வருவதாகவும் விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.