close
Choose your channels

துல்கருக்கு பதில் சிம்பு ஓகே.. ஜெயம் ரவிக்கு பதில் இந்த பிரபல நடிகரா? 'தக்லைஃப்' புதிய அப்டேட்..!

Tuesday, March 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படத்தின் இருந்து திடீரென துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகி விட்டதாக கூறப்படும் நிலையில் துல்கர் சல்மான் நடிக்க இருந்த கேரக்டரில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த தகவல் விரைவில் உறுதி செய்யப்படும் என்று கூறப்படும் நிலையில் தற்போது ஜெயம் ரவி நடிக்க இருந்த கேரக்டரில் நடிக்க இருக்கும் நடிகர் குறித்த தகவல் கசிந்துள்ளது. ஜெயம் ரவி நடிக்க இருந்த கேரக்டரில் நடிக்க அரவிந்த்சாமியுடன் மணிரத்னம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை அரவிந்த்சாமி இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றால் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் த்ரிஷா இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கால்சீட் பிரச்சனை இருந்தாலும் அவர் அட்ஜஸ்ட் செய்து இந்த படத்திற்காக எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் கால்ஷீட் தர தயாராக இருப்பதாகவும் தெரிகிறது. எனவே த்ரிஷா இந்த படத்தில் இருந்து விலக வாய்ப்பே இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிம்பு மற்றும் அரவிந்த்சாமி இந்த படத்தில் இணைவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தை நோக்கி செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஆர் ரஹ்மான் இசையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.