close
Choose your channels

சிம்புவை அடுத்து இன்னொரு பிரபல நடிகருடன் கெளதம் கார்த்திக்.. இயக்குனர் இவர்தான்..!

Thursday, April 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் சிம்புவுடன் கௌதம் கார்த்திக் நடித்த ’பத்து தல’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் வசூலிலும் இந்த படம் திருப்திகரமாக உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்புவை அடுத்து இன்னொரு பிரபல ஹீரோவுடன் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் ஒருவரான ஆர்யாவுடன் கௌதம் கார்த்திக் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தை விஷ்ணு விஷால் நடித்த ‘எஃப்ஐஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது

இந்த நிலையில் நான் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான ’1947’ என்ற திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக உள்ளது. கௌதம் கார்த்திக் நடிப்பில் பொன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்துள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவில் சுதர்சன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதி என்றும் ஒரு சிறு கிராமத்தில் உள்ள மக்கள் வெள்ளையனுக்கு எதிராக எழுச்சி அடைந்து செய்த போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.