close
Choose your channels

ஏ.ஜி.எஸ்-கே.வி.ஆனந்த் படத்தின் முக்கிய தகவல்

Monday, July 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'அனேகன்', 'வை ராஜா வை' மற்றும் 'தனி ஒருவன்' என்ற மூன்று தொடர் வெற்றி படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது என்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இந்த திரைப்படம் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 18வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
'காதலும் கடந்து போகும்' படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய்சேதுபதி-மடோனா செபாஸ்டியன் இணையும் இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் டி.ராஜேந்தர் நடிக்கவுள்ளார். பிரபல எழுத்தாளர்கள் சுபா திரைக்கதை வசனம் எழுதும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கின்றார். இந்த படமும் கே.வி.ஆனந்தின் முந்தைய படங்கள் போல அதிரடி ஆக்சன் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.