close
Choose your channels

தனுஷை உரித்து வைத்தால்போல் இருக்கும் யாத்ரா: ஐஸ்வர்யாவின் நெகிழ்ச்சி பதிவு!

Monday, October 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் நட்சத்திர தம்பதியின் மூத்த மகன் யாத்ராவின் 15 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது

நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2006 ஆம் ஆண்டு யாத்ரா என்ற மகனும் 2010ஆம் ஆண்டு லிங்கா என்ற மகனும் பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனுஷ், ஐஸ்வர்யாவின் மகன் யாத்ராவின் 15 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதுகுறித்து தனது மகனை கட்டிப்பிடித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை ஐஸ்வர்யா தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ’உன் அம்மாவாக இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன் என்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் என் முதல் குழந்தையான உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் என்றும் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று உன்னை பார்க்கும் போதெல்லாம் எனக்கு தோன்றும் என்றும், கடவுள் உன்னை நேசிப்பார் என்றும், கடவுள் உன்க்கு வாழ்க்கையில் அனைத்தையும் வழங்குவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்

இந்த புகைப்படத்தை பார்த்த பலர் தனுஷின் மகன் யாத்ரா அப்படியே தனுஷை உரித்து வைத்தாற்போல் உள்ளார் என்றும் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.