close
Choose your channels

ரூ.1.5 கோடி நன்கொடை கொடுத்த '2.0' நடிகர்!

Sunday, March 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் அக்சய்குமார் தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று ‘லட்சுமி பாம்’. ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் இந்த படம் தமிழில் வெளியான ‘முனி’ படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் திருநங்கை கேரக்டர் ஒன்று முக்கிய கேரக்டராக வரும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகர் அக்சய்குமார், திருநங்கைகள் இல்லம் ஒன்றை கட்டுவதற்கு ரூ.1.5 கோடி நன்கொடை கொடுத்துள்ளார். இந்த இல்லம் தான் திருநங்கைகளுக்காக இந்தியாவில் கட்டப்படும் முதல் இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருநங்கைகளின் வளர்ச்சிக்காக இந்த இல்லத்தை ராகவா லாரன்ஸ் தனது டிரஸ்ட் மூலம் கட்டும் பணியை சமீபத்தில் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இல்லம் குறித்து ‘லட்சுமி பாம்’ படத்தின் படப்பிடிப்பின்போது ராகவா லாரன்ஸ், அக்சய்குமாரிடம் தெரிவித்ததாகவும், இதனையறிந்த அவர் உடனே சற்றும் யோசிக்காமல் ரூ.1.5 கோடி நிதியுதவி செய்ய ஒப்புக்கொண்டதாகவும் ராகவா லாரன்ஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.