close
Choose your channels

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் அலியாபட்?

Wednesday, January 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி அவர்கள் 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு பிரமாண்டமான படங்களை அடுத்து தற்போது ராம்சரண்தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் 'ஆர்.ஆர்.ஆர்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையிலும் இன்னும் இந்த படத்தின் நாயகிகள் குறித்த தகவல் வெளியே வரவில்லை. பல முன்னணி நடிகைகளிடம் எஸ்.எஸ்.ராஜமெளலி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்தது

இந்த நிலையில் தற்போது எஸ்.எஸ்.ராஜமெளலி, பிரபல பாலிவுட் நடிகை அலியா பட் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக அவர் கரண்ஜோஹரை நாடியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அலியா பட் இந்த படத்தில் நடிப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் என்றாலும் மிக விரைவில் இதுகுறித்த தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.