close
Choose your channels

ஒரே செல்பியால் சூப்பர் ஸ்டாராக மாறிய தளபதி விஜய்

Tuesday, February 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபடி விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடக்கிறது என்பது உள்ளூர் விஜய் ரசிகர்கள் பலருக்கே தெரியாமல் இருந்தது. ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் பாஜகவினர் புண்ணியத்தில் தற்போது உலகம் முழுவதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் தான் நடந்து வருகிறது என்பது தெரிந்துவிட்டது.

அதிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி இருந்த இடத்தில் அவர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்ட தளபதி விஜய், அந்த செல்பி புகைப்படத்தை நேற்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பின்னர் அந்த பதிவுக்கு கிடைத்த வரவேற்பை பார்க்கும்போது உண்மையிலேயே அவர் சூப்பர் ஸ்டாராக மாறிவிட்டார் என்ற எண்ணம் தான் பலருக்கு ஏற்படுகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்து ஒரு சில பிரபலங்கள் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருகின்றனர். நடிகை ரம்யா பாண்டியன் தனது டுவிட்டரில் ’ஒன்லி சூப்பர் ஸ்டார் விஜய்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் பிரபல மோட்டார் சைக்கிள் வீராங்கனை அலிஷா அப்துல்லாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய்யை ’சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்துள்ளார். நடிகை கஸ்தூரி வழக்கம்போல் விஜய்க்கு கைதட்டி பாராட்டு தெரிவித்துள்ளார். 

ஒரே ஒரு செல்பியால் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு விஜய் உயர்ந்து விட்டார் என்பதையே இது காட்டுகிறது என்பதும் நேற்று மாலை முதல் விஜய்யின் செல்பி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

?????? https://t.co/Lc23JQM1kS

— Kasturi Shankar (@KasthuriShankar) February 10, 2020

Superstar! @actorvijay pic.twitter.com/eSjcY0ay74

— Alisha abdullah (@alishaabdullah) February 10, 2020

One and only Superstar "THALAIVA" @actorvijay pic.twitter.com/5SMVCWegfD

— Ramya Pandiyan (@Actress_Ramya) February 10, 2020

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.