close
Choose your channels

அவர் மாயாஜாலம் செய்கிறார்… பாடகரைப் பார்த்து சிலிர்த்துப்போன நடிகர் அல்லு அர்ஜுன்!

Monday, January 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான “புஷ்பா“ திரைப்படம் தற்போது இந்தியா முழுக்கவே வரவேற்பு பெற்றிருக்கிறது. மேலும் இந்தப் பாடலில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் இந்திய ரசிகர்கள் மத்தியில் தற்போது படு ஹிட் அடித்து ரீல்ஸ்களாக சோஷியல் மீடியாவை நிரப்பி வருகின்றன.

இந்நிலையில் புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற “ஸ்ரீவள்ளி“ பாடல் குறித்த ஒரு நெகிழ்ச்சியான தருணத்தை நடிகர் அல்லு அர்ஜுன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் புஷ்பா திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றிற்காக பாடகர் சித்ஸ்ரீராம் மேடையில் ரிகர்சல் செய்து கொண்டிருந்தார். ஆனால் அவர் பாடும்போது எந்த இசைக்கருவிகளும் இசைக்கவில்லை. அவர் மெதுவாகப் பாட ஆரம்பித்து பின்னர் இசைக்கருவிகள் ஒலிக்கும் என எதிர்ப்பார்த்தேன். ஆனால் அப்படியொன்றும் நடக்கவில்லை.

எந்தவித இசைக்கருவிகளும் இல்லாமல் அவர் பாடியதை கேட்டு நான் அந்த இசை வெள்ளத்தில் மிதந்தேன். அவர் குரலில் ஏதோ மாயம் உள்ளது என்பது மட்டும் எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இவருக்கு இசையே தேவையில்லை. இவரே ஒரு இசைதான் என நடிகர் அல்லு அர்ஜுன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 2013 இல் “கடல்“ திரைப்படத்திற்காக பாட ஆரம்பித்த பாடகர் சித்ஸ்ரீராம் தற்போது இந்திய ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற ஒரு பாடகராக உருவெடுத்துள்ளார். கர்நாடக இசைக்கு டும்பத்தைச் சேர்ந்த இவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து இங்குள்ள ரசிகர்களிடையே தனது குரலால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.