close
Choose your channels

திருமணம் எப்போது? காதலர் தினத்தில் செம அறிவிப்பை வெளியிட்ட அமிர்-பாவனி..!

Tuesday, February 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக இருந்த அமீர் மற்றும் பாவனி பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் அந்த காதல் வெளியே வந்த பின்னரும் தொடர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். பல நிகழ்ச்சிகளில் இருவரும் இணைந்து கலந்து கொண்ட நிலையில் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு காதலர் தினத்தை ஒட்டி பேட்டி அளித்த போது, ‘நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வது உறுதி, ஆனால் அதே நேரத்தில் இன்னும் ஒரு வருடம் கழித்து தான் திருமணம் செய்வோம், திருமணத்திற்கு முன்பு நாங்கள் எங்கள் துறையில் சாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

திருமணம் குறித்து பாவனி கூறியபோது, ‘எனக்கு விரைவில் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டு குடும்பத் தலைவியாக குழந்தைகளுடன் வாழ வேண்டும் என்று ஆசை என்றும் அந்த நாள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்து விட்டால் பொறுப்புகள் அதிகமாகும் என்றும் அதற்குள் நாங்கள் எங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்றும் எங்களுடைய தொழிலில் நன்றாக காலூன்ற வேண்டும் என்றும் அதன் பிறகு தான் திருமணம் என்றும் அமீர்-பாவனி ஆகிய இருவருமே அந்த பேட்டியில் தெரிவித்து உள்ளனர். இதனை அடுத்து அமீர்-பாவனி திருமணம் விரைவில் என்பது உறுதி செய்யப்பட்டாலும் இந்த வருடம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.