close
Choose your channels

அதர்வா போதைக்கு காரணமான இரு நாயகிகள்

Tuesday, April 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதர்வாவின் சொந்த நிறுவனமான 'கிக் ஆஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான 'செம போதை ஆகாதே' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்க இரண்டு நாயகிகள் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.
வசந்தபாலன் இயக்கிய 'காவியத்தலைவன்' படத்தில் ரங்கம்மா என்ற கேரக்டரில் நடித்த அனாய்கா சோட்டி இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார். மேலும் அதர்வாவுக்கு ஜோடியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த மேற்குவங்க நடிகை மிஸ்தி சக்ரபோர்த்தி (Mishti Chakraborty) நடிக்கின்றார். இருவருக்குமே சம அளவில் முக்கியத்தும் கொண்ட கேரக்டர்கள் என்று இயக்குனர் பத்ரி வெங்கடேசன் கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாகவும், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும், மிக விரைவில் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் இயக்குனர் பத்ரி கூறியுள்ளார். இவர் ஏற்கனவே அதர்வாவின் முதல் படமான 'பாணா காத்தாடி' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.