close
Choose your channels

அடுத்த ஆண்டு நானும் ஒரு இயக்குனர்: அரவிந்தசாமி

Saturday, December 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'தளபதி' படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் காலடி எடுத்து வைத்த நடிகர் அரவிந்தசாமி மிக குறுகிய காலத்தில் தொடர்ச்சியாக வெற்றிப்படங்கள் கொடுத்து முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்தார். பின்னர் இடையில் சில வருடங்கள் திரையுலகில் இருந்து விலகியிருந்த அரவிந்தசாமி மீண்டும் 'தனி ஒருவன்' படத்தில் வில்லனாக நடித்து விஸ்வரூபம் எடுத்தார்.

தற்போது அவர் கைநிறைய படங்களுடன் பிசியான நடிகர்களில் ஒருவராக உள்ளார். இந்த நிலையில் இன்று அவர் தனது சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர் நீங்கள் எப்போது படம் இயக்குவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அரவிந்தசாமி, '2018ஆம் ஆண்டு நானும் ஒரு இயக்குனர் தான் என்றும், யாரும் எதிர்பாராத வகையில் வித்தியாசமான இயக்குனராக அறிமுகமாவேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தமிழ்ப்படங்களுக்கும் மற்ற படங்களுக்கும் உள்ள வித்தியாசம் வெறும் மொழி வேறுபாடு மட்டுமே என்று கூறிய அரவிந்தச்சாமி, தனக்கு மானசீக குருவாக தனது தந்தை இருப்பதால் தனக்கு வெற்றிகள் கிடைத்து வருவதாக கூறினார். மேலும் பிறப்பு, இறப்பு இந்த இரண்டை தவிர இடையில் உள்ள எந்த நிகழ்வையும் தான் ஞாபகம் வைத்து கொள்ள விரும்புவதில்லை என்றும் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலாக கூறினார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.