close
Choose your channels

'பிகில்' படம் குறித்து அர்ச்சனா அறிவித்துள்ள அசத்தலான அறிவிப்பு

Friday, December 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவான பிகில் திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படம் உலகம் முழுவதும் ரூபாய் 300 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படம் வெளியாகி இன்றுடன் 50 நாள்கள் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து பிகில் திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘தமிழ் படங்களில் மிக அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பிகில் திரைப்படம் பெற்றுள்ளதாகவும் இந்த 50-ஆவது நாளில்

இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்வதாகவும் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசித்த ஒவ்வொரு ரசிகர்களுக்கும், இந்த படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்

அர்ச்சனாவின் இந்த டுவீட்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. மேலும் ‘பிகில்’ திரைப்படம் வெளியாகிய 50வது நாளை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.