close
Choose your channels

அருள்நிதியின் 'K13' சென்சார் தகவல்

Tuesday, April 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு அருள்நிதி நடித்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்னும் த்ரில் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'K13'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

'K13' திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான SP சினிமாஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

அருள்நிதி, ஷராதா ஸ்ரீநாத், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பரத் நீலகண்டன் இயக்கியுள்ளார். அரவிந்த்சிங் ஒளிப்பதிவில் , ரூபன் படத்தொகுப்பில், சாம் சிஎஸ் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது. சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.