close
Choose your channels

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து.. அருண்விஜய்க்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி புகைப்படங்கள்!

Thursday, October 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண் விஜய் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்த புகைப்படங்களை அருண் விஜய் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு விரைவில் குணமாகி படப்பிடிப்புக்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அருண்விஜய் நடித்த ’யானை’ மற்றும் ’சினம்’ ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்த ’பார்டர்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அருண் விஜய் தற்போது ’அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் லண்டனில் நடந்த நிலையில் அடுத்த மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் பயிற்சிக்காக அருண்விஜய் சென்றிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவருடைய காலில் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்துடன் அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு, காலில் காயம் ஏற்பட்டதால் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் 100 சதவீதம் குணமாகி மீண்டும் ’அச்சம் என்பது இல்லையே’ படத்தின் படப்பிடிப்புக்கு செல்ல இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

இந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் விரைவில் அவர் குணமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அருண் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கும் ’அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.