close
Choose your channels

பிசிசிஐ தலைவரையும் விட்டுவைக்காத புஷ்பா ஃபீவர்… ரசிகர்களே வியந்த வீடியோ!

Saturday, March 26, 2022 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாகக் கடந்த டிசம்பரில் வெளியாகி வணிக ரீதியாக வெற்றிப்பெற்ற திரைப்படம்தான் “புஷ்பா”. இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பைப் பெற்றது.

மேலும் புஷ்பா பாடலால் மயங்கிப்போன பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் எனப் பலரும் இன்ஸ்டா மற்றும் யூடியூபில் ரீல்ஸ்களை பதிவிட்டு வைரலாக்கி வந்தனர். இதில் ரிவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, டேவிட் வார்னர், விராட் கோலி, ஷாகிப் அல் ஹசன் என கிரிக்கெட் பிரபலங்களும் அடக்கம். அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறார் பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலி.

சவுரவ் கங்குலி கலந்துகொண்ட ஒரு ரியாலிட்டி ஷோவின்போது அங்குள்ள சிறுவர்கள் கேட்டுக் கொண்டதால் அவர் “புஷ்பா“ திரைப்படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி பாடலுக்கு ஸ்டைலான மூவெண்ட் ஸ்டெப்பை போட்டு அசத்தியிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் புஷ்பா ஃபீவர் இன்னுமா முடியல… என ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஐபிஎல் 15 ஆவது சீசன் தொடருக்கான முதல் போட்டி இன்று மாலை 7.30 மணிக்கு சென்னை சிஎஸ்கே அணிக்கும் கேகேஆர் அணிக்கும் இடையே துவங்கவுள்ள நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி புஷ்பா பாடலுக்கு மாஸ்டர் பீஸ் ஸ்டெப்பை போட்டு அசத்தியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.