close
Choose your channels

'பீஸ்ட்' படம் பார்த்தவருக்கு கத்திக்குத்து, 'கேஜிஎஃப் 2' படம் பார்த்தவருக்கு துப்பாக்கி சூடு: பெரும் பரபரப்பு

Tuesday, April 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பீஸ்ட்’ படம் பார்த்தவருக்கு கத்திக்குத்தும், ‘கேஜிஎஃப் 2' படம் பார்த்தவருக்கு துப்பாக்கி சூடும் ஒரே நாளில் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அம்பத்தூரை சேர்ந்த லோகேஷ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பீஸ்ட் படத்தை பார்த்த போது தியேட்டரில் ஒரு கும்பலுடன் சண்டை போட்டுள்ளார். இந்த முன்விரோதம் காரணமாக அந்த மர்ம கும்பல் நேற்று பணி முடிந்து லோகேஷ் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது சுற்றிவளைத்து சரமாரியாக கத்தியால் குத்தி லோகேஷை கொலை செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து மர்ம கும்பலை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது ‘பீஸ்ட்’ படம் பார்த்த போது ஏற்பட்ட முன்விரோதத்தால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

அதேபோல் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ‘கேஜிஎஃப் 2 படத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த நபர் முன் இருக்கையில் காலை வைத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இந்த நிலையில் திடீரென பின் இருக்கையில் இருந்தவர் துப்பாக்கியை எடுத்து முன் இருக்கையில் உட்கார்ந்து இருந்தவரை நோக்கி சுட்டார். இதனால் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் துப்பாக்கியால் சுட்டவர் தலைமறைவாகியுள்ளதை அடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர் .

ஒரே நாளில் 'பீஸ்ட்’ படம் பார்த்தவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதும், ‘கேஜிஎஃப் 2’ படம் பார்த்தவருக்கு துப்பாக்கி சூடும் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.