close
Choose your channels

21 வயது சிஎஸ்கே வீரருடன் 'பாக்கியலட்சுமி' நடிகை காதலா? இது என்ன புதுக் கதையா இருக்குது?

Wednesday, March 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிஎஸ்கே வீரருடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்து வரும் நடிகைக்கு காதல் என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் இதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து பேச்சாளர் மற்றும் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான மதிஷா பத்திரனாவை, ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்து வரும் நேஹா என்பவர் காதலித்து வருவதாக ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த செய்தி குறித்து சீரியல் நடிகை நேஹா விளக்கம் அளித்துள்ளார்

‘பொதுவாக எனக்கு கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இல்லை, ஒரு முறை நான் படப்பிடிப்பின் போது சிஎஸ்கே போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் பத்திரெனாவை பற்றி கேள்விப்பட்டேன். அதனை எடுத்து அவருடைய இன்ஸ்டா ஸ்டேட்டஸை என்னுடைய ஸ்டோரில் பதிவிட்டேன், அதை வைத்து எனக்கும் அவருக்கும் காதல் என கதை கட்டிவிட்டார்கள்

உண்மையிலே நான் பத்திரனாவை நேரில் பார்த்தது கூட இல்லை, அவருடன் எனக்கு எந்த விதமான காதலும் இல்லை , எனவே தயவு செய்து இந்த வதந்திகளை நிறுத்தி கொள்ளுங்கள் என்று பதிவு செய்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை நேஹா ஏற்கனவே ’வாணி ராணி’ சீரியலில் ராதிகாவின் மகள் தேனு என்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.