close
Choose your channels

'சவுகார்பேட்டை' இயக்குனரின் அடுத்த பேய்ப்படம்

Wednesday, November 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் வடிவுடையான இயக்கத்தில் உருவான ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி நடித்த சவுகார்பேட்டை திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் வியாபாரம் எதிர்பார்த்ததைவிட அதிகளவு நடந்துள்ளதால் இந்த படத்தின் தயாரிப்பாளர்களான ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் மற்றும் ஜோன்ஸ் ஆகியோர் இயக்குனர் வடிவுடையானுக்கு கார் ஒன்றை பரிசளித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இவர்கள் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் வடிவுடையானுக்கு கொடுத்துள்ளனர். வடிவுடையான் இயக்கவுள்ள அடுத்த படத்திற்கு 'பொட்டு' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தில் பரத் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் சரவணன், சுமன், சிங்கம்புலி, ஊர்வசி உள்பட பலர் நடிக்கவுள்ளனர். நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு நா.முத்துகுமார் மற்றும் விவேகா பாடல்கள் எழுதுகின்றனர்.

சவுகார்பேட்டை' படம் போலவே இந்த படமும் பேய்ப்படமாக இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை மருத்துவக்கல்லூரியின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் வடிவுடையான் தெரிவித்துள்ளார். இம்மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.