close
Choose your channels

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களுக்கு பாரதிராஜா வைத்த செக்!

Monday, October 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பெரும் சிக்கலில் உள்ள காரணத்தினால் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து அவ்வப்போது கோரிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனை அடுத்து ஒரு சில நடிகர்கள், நடிகைகள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்தாலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் யாரும் சம்பளத்தை குறைக்க இதுவரை முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பாரதிராஜா தலைமையில் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற புதிய சங்கம் உருவாகி ஆக்கபூர்வமான சில செயல்களை செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இயக்குனர் பாரதிராஜா அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ரூபாய் 10 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30 சதவீதம் குறைத்து கொண்டு, முடியும் தருவாயில் உள்ள திரைப்படங்களை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது வேண்டுகோளாக இருந்தாலும் மாஸ் நடிகர்களுக்கு வைத்த செக் என கருதப்படுகிறது. இந்த வேண்டுகோளை தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் ஏற்றுக்கொண்டு கொரோனா பாதிப்பினால் சிக்கலில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு உதவுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.