close
Choose your channels

மலையாள நடிகை வழக்கு: நடிகர் திலீப்புக்கு மேலும் ஒருநாள் காவல் நீடிப்பு

Friday, July 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல மலையாள நடிகை பாலியல் துன்புறத்தல் வழக்கில் கடந்த 11ஆம் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்பை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல்துறைக்கு அனுமதி அளித்து அங்காமலி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இரண்டு நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், இன்று அங்காமலி நீதிமன்றத்தில் திலீப்பை போலீசார் ஆஜர் படுத்தினர். அப்போது தனக்கு ஜாமின் அளிக்கவேண்டும் என திலீப் தரப்பிலும், மேலும் ஒருநாள் திலீப்பை விசாரிக்க அனுமதி வேண்டும் என்று போலீஸ் தரப்பிலும் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இரண்டு மனுக்களையும் விசாரித்த அங்காமலி நீதிமன்ற நீதிபதிகள், திலீப்புக்கு ஜாமின் வழங்க மறுத்ததோடு, மேலும் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இதனையடுத்து திலீப் இன்றும் விசாரணை செய்யப்படுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.