close
Choose your channels

நடிகை பாவனாவின் கார் வழிமறிக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்

Saturday, February 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சித்திரம் பேசுதடி, அசல், ஜெயங்கொண்டான் உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை பாவனா. இவர் நேற்றிரவு தனது காரில் கொச்சியில் இருந்து திருச்சூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் ஒன்று அவரது காரை வழிமறித்து கார் ஓட்டுனரை பயமுறுத்தி வலுக்கட்டாயமாக காரினுள் நுழைந்தது.

பின்னர் பாவனாவிடம் தகாத முறையில் நடந்து கொண்டதோடு அவரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பின்னர் கார் பளரிவட்டம் என்ற பகுதிக்கு வந்த போது காரில் இருந்த மர்ம கும்பல் இறங்கி ஓடிவிட்டனர்.

இந்நிலையில் பாவனா அந்த பகுதியில் இருந்த இயக்குனர் ஒருவர் வீட்டில் அடைக்கலம் புகுந்தார். இதுகுறித்து காவல்துறையினர்களிடம் பாவனா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பாவனாவின் கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் பாவனாவின் முன்னாள் கார் டிரைவரை போலீசார் தேடி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.