close
Choose your channels

மேடை நிகழ்ச்சியில் பின்னணி பாடகிக்கு துப்பாக்கிச் சூடு… திரையுலகினர் அதிர்ச்சி!

Friday, June 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போஜ்பூரி பின்னணி பாடகி மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து விட்டதாகவும் அதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இச்சம்பவம் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பீகார் மாநிலத்திலுள்ள சப்ரா எனும் இடத்தில் தனியார் மேடை நிழ்க்ச்சி ஒன்று நடத்தப்பட்டபோது அங்கு கொண்டாட்டத்திற்காக துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் போஜ்பூரி மொழியில் பாடிவரும் பின்னணி பாடகி நிஷா உபாத்யாய் கலந்துகொண்ட நிலையில் அவருடைய இடது தொடையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துவிட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பின்னணி பாடகி தற்போது பாட்னாவிலுள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய போலீசார், ஜனதா பஜார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட செந்துவார் எனும் பகுதியில் தனியார் மேடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் அங்கு கொண்டாட்டத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

ஆனால் தற்போது பாடகி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இதுகுறித்து யாரும் வழக்குத் தொடுக்கவில்லை என்ற போலீசார் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தற்போது விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பின்னணி பாடகி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த விவகாரம் குறித்து பேசிய கலை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜிதேந்திர குமார் ராய், கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்துவது கிரிமினல் குற்றம் என்றும் இதை மன்னிக்கவே முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.