close
Choose your channels

காயத்ரிக்கு எதிராக திரும்பும் ஒட்டுமொத்த பிக்பாஸ் குடும்பம்: அதிரடி திருப்பம்

Monday, August 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று காயத்ரிக்கு ஆதரவாக இருந்த ஒரே நபரான சக்தி வெளியேற்றப்பட்டார். உண்மையில் நேற்று காயத்ரிதான் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பிக்பாஸ் எதிர்பாராதவிதமாக அவரை காப்பா|ற்றிவிட்டதால் சக்தி வெளியேறினார்.

இந்த நிலையில் நேற்று சக்தி வெளியேறியது குறித்து கமல்ஹாசனிடம் கருத்து கூறிய ரைசா, 'சக்தி வெளியேறினால் காயத்ரி டென்ஷன் ஆகிவிடுவார், அந்த டென்ஷனில் நாங்கள் தான் பாதிக்கப்படுவோம்' என்று கூறியிருந்தார். ரைசாவின் கூற்று உண்மை என்பதைபோல் நேற்று காயத்ரி மீண்டும் முருங்கை மரம் ஏறி தனது சுயரூபத்தை மீண்டும் ஒருமுறை காண்பித்தார். கமலிடம் மட்டும் குழந்தை போல் கொஞ்சும் காயத்ரி, திடீரென அன்னியன் விக்ரம் போல் மாறி தனக்கு பிடிக்காதவர்களுக்கு டார்ச்சர் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் இன்றைய புரமோவில் பிக்பாஸ் பங்கேற்பாளர்களுக்கு நாமினேஷன் பட்டியல் தயாரிக்கும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் அனைவரும் கன்ஃபெக்ஷன் அறையில் தான் நாமினேஷன் குறித்து கருத்து தெரிவிபார்கள். இதில் இந்த வாரம் வெளிப்படையாக, வெளியேற்றப்படுவது யார் என்பது குறித்து அவரது உருவப்படத்தின்மீது ஸ்ப்ரே அடிக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் ரைசா வெளியேற வேண்டும், அவருக்கு மரியாதையே தெரியவில்லை என்றும் கூறி ரைசா உருவப்படம் மூலம் ஸ்பிரே அடித்தார் காயத்ரி.

ஆனால் ரைசா உள்பட பங்கேற்பாளர்கள் அனைவருமே காயத்ரியின் உருவப்படம் மீது ஸ்ப்ரே அடித்து தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் இந்த வார எலிமினேஷன் பட்டியலில் காயத்ரி பெயர் இருக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. அவ்வாறு இருந்தால் பிக்பாஸ் மட்டுமின்றி அந்த கடவுள்கூட அவரை பார்வையாளர்களின் வாக்குகளில் இருந்து காப்பாற்ற முடியாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.