close
Choose your channels

என்ன வெங்காயத்த நம்ம பண்றது.. விக்ரமனிடம் ஆவேசமான போட்டியாளர்!

Wednesday, December 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி 58 நாள் முடிவடைந்த நிலையில் இன்னும் கிட்டத்தட்ட 40 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இருக்கும் போட்டியாளர்களில் விக்ரமன் முன்னிலையில் இருப்பதால் அவரை மற்ற போட்டியாளர்கள் டார்கெட் செய்வது போல் தெரிகிறது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான முதல் புரோமோவில் விக்ரமனிடம் ஆயிஷா ஆவேசமாக பேசுகிறார். இதை செய்ய வேண்டாம், அதை செய்ய வேண்டாம் என்று எதற்காக சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன பிரச்சனை? என்று ஆவேசத்துடன் கேட்கிறார்.

இதனை அடுத்து ஏடிகே போட்டிருக்கும் வேஷத்தை விக்ரமன் கிண்டல் செய்கிறார். போட்டிருக்கும் வேஷதிற்கும் நீங்கள் பேசுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூற அதற்கு பதில் அளித்த ஏடிகே, ‘நீங்கள் லாஜிக் பார்க்க வேண்டாம், இது பெர்பார்மன்ஸ் பண்ற இடம், இங்கே வேற என்ன வெங்காயத்தை பண்றது என்று கேட்கிறார்.

இதனை அடுத்து ’என்னை நீங்கள் டார்கெட் செய்கிறீர்கள் என்று விக்ரமன் கூற அதற்கு ஏடிகே, ’நீங்கள் எத்தனை பேரை டார்கெட் செய்தீர்கள் என்று கூறுகிறார். அதனை அடுத்து ’நான் இனிமேல் உங்களிடம் பேச விரும்பவில்லை என்னுடைய சுதந்திரத்தை நீங்கள் மதிக்கவில்லை என்று கூறுவதுடன் இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது.

மொத்தத்தில் விக்ரமனை கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் டார்கெட் செய்வது போல் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.