close
Choose your channels

இந்த இரண்டு பேரும் குரூப்பிஸம் வச்சுருக்காங்க.. கமல் முன் குற்றஞ்சாட்டிய அசீம்

Sunday, November 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மைனா மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் குழுவாக செயல்படுகிறார்கள் என கமல் ஹாசன் முன் அசீம் குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் குரூப்பிஸம் இருக்கும் என்பதும் கடந்த 4வது சீசனில் இருந்த அன்பு குரூப் உள்பட பல குரூப்புகள் இருக்கின்றன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் 6வது சீசனிலும் குரூப்பிஸம் இருப்பதாக கமல்ஹாசன் தனது சந்தேகத்தை தெரிவித்த நிலையில் யாரெல்லாம் குரூப்பிஸம் இருப்பதாக எண்ணுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதனை அடுத்து எழுந்த அசீம், மைனா மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் குரூப்பிஸத்துடன் செயல்படுகின்றனர் என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து ஆத்திரத்தில் மைனா, ‘நாங்கள் இருவரும் பிரண்ட்ஷிப் ஆகத் தான் இருக்கிறோம் என்றும், விளையாட்டு வேறு நண்பர்கள் வேறு எங்களிடையே குரூப்பிஸம் கிடையாது என்றும், அப்படி ஒருவேளை இருப்பதாக நீங்கள் நினைத்தால் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

இதனையடுத்து அவர்களே குரூப்பிஸம் இருப்பதை ஒப்புக்கொண்டார் என்று அசீம் கூற, ஆக மொத்தத்தில் குரூப்பிஸம் இருப்பது ஆகிறது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கமல்ஹாசன் கூறுகிறார். மேலும் இந்த 50வது எபிசோடில் கூட விளையாட்டை ஆரம்பியுங்கள் என நான் கூற வேண்டிய நிலை இருப்பது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கமல்ஹாசன் கூறியதுடன் இன்றைய புரோமோ முடிவுக்கு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.