close
Choose your channels

ஒண்ணு இவ இருக்கணும், இல்லாட்டி நான் இருக்கணும்: பிக்பாஸிடம் கோரிக்கை வைக்கும் நிரூப்!

Monday, December 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் ஃபினாலே என்ற இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் டிக்கெட்டை பிக்பாஸ் அறிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த டிக்கெட்டை பெற தகுதியானவர் யார் என்பதை தேர்வு செய்து அறிவிக்க வேண்டும் என்றும், அதேசமயம் இந்த டிக்கெட்டை பெற தகுதி இல்லாத ஒருவரையும் தேர்வு செய்ய வேண்டும் என்றும் பிக்பாஸ் கூறுகிறார்.

இதை அடுத்து இந்த டிக்கெட்டை பெற காரசாரமான விவாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான புரமோவில் பிரியங்கா நிரூப்பிடம், ‘உனக்கு டிக்கெட் டு ஃபினாலே கிடைக்கக்கூடாது என்பது எனது எண்ணம். உன்னை மாதிரி வலுவான உள்ள ஒருவருடன் என்னால் போட்டி போட முடியாது’ என்று கூறுகிறார். இதனையடுத்து ‘நான் உன்னுடன் போட்டி போட மாட்டேன் என்று சொல்லவில்லை, ஆனால் உன்னுடன் போட்டி போட முடியாது என்று சொல்கிறாய்’ என்று கூற, உடனே பிரியங்கா, ‘உன்னை மாதிரி ஒருத்தர் விலகி இருந்தால் பாக்கியிருக்கும் 7 பேருடன் போட்டி போட்டு நான் வருவேன்’ என்று கூறுகிறார்.

இதனால் ஆத்திரமடைந்த நிரூப், ‘பிக்பாஸ் டோரை திறந்துவிடுங்கள், என்னுடன் போட்டி போட முடியாது என்று பிரியங்கா சொல்கிறார். இதனால் இந்த வீட்டில் இவ இருக்க வேண்டுமா? அல்லது நான் இருக்க வேண்டுமா? என்று முடிவு செய்து தயவுசெய்து ஒருவரை வெளியே அனுப்பிவிடுங்கள்’ என்று கூறுகிறார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.